படைப்பு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆண் காமத்தை பற்றி எழுதும் போது கொண்டாடும் ஆண்கள் அதையே பெண் எழுதினால் ரசிங்க தயவு செய்து கொச்சை படுத்த வேண்டாம்.... காமமும் காதலில் ஒன்றே அதை சிலாகிப்பதில் ஆண் பெண் பேதமென்ன .... கவிதை ரதி தேவி.
காதலே காதலை காதலி
**************************
காத்திருக்கும் காதலைநான்
கட்டித் தர வாரேன்டா!
கன்னக்குழி ரொம்பும்வரை
கள்ளூத்தித் தரேன்டா!
உன்னோட இதழ்கொண்டு
ஊர்வலமாப் போயேன்டா!
உடம்பெல்லாம் உன்தெருதான்
உற்சவத்தை நடத்தேன்டா!
உச்சிதொட்டு பாதம்வரை
உன்நெனப்பு நோகுதட!
ஊத காத்தும் பட்டுப்புட்டா
ஆசையெல்லாம் சாகுதடா!
காதோரம் மூச்சுக்காத்தை
கசியவிட வாவேண்டா!
கிறங்கி போகும் காதலுக்கு
சொர்க்கத்தை காட்டேன்டா!
வானவில்லா வளைஞ்சுதரேன்
வாலிபத்தை வாழ்த்தேன்டா!
இச்சையெனும் பாடலுக்கு
இசையமைக்க வாயேன் டா
உள்ளிருக்கும் உஷ்ணத்தை
உள்ளன்பால் தணியேன்டா !
உணர்ச்சி தாகம் தணியட்டுமே
உருகி நீயும் உருகேன்டா !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக