சனி, 22 செப்டம்பர், 2018

மலர்ச்சி


உன்னை 
காணும் 
ஒவ்வொரு 
நொடியும் ; 
சூரியனைக் கண்ட
தாமரையாக
மலர்கிறேன்  ! ...
 
     -:) மாலினிபாஸ்கர்.

மழலையின் ஸ்பரிசம்


தென்றல்
போன்ற
சிலிர்ப்பு ! 
பூ
போன்ற
மென்மை !
பிறை
போன்ற
குளிர்ச்சி  ! 
"மழலையின் ஸ்பரிசம் "

     

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

நாக்கு


கத்தியின்றி 
இரத்தமின்றி
சாய்க்கும்
ஒரே
ஆயுதம்
"நாக்கு  "

கவிதை :)- மாலினிபாஸ்கர்.

தெய்வம்


கருவறையை
சுமப்பதால் தான்
பெண்கள் 
தெய்வமாக
போற்றப் படுகிறார்கள்  .!   
"பெண்மையை போற்றுவோம்   "...

         கவிதை:)-  மாலினிபாஸ்கர்.     

வியாழன், 20 செப்டம்பர், 2018

பாசம்..


மனம்
வேண்டுமானால் 
குரங்காக
தாவிக்  கொண்டே
இருக்கலாம்  ... 

என்
நினைவோ
மலரை
வட்டமடிக்கும்
வண்டாக ;
உன்னை
மட்டுமே
சுற்றுகிறது .....     

  :)- கவிதை  மாலினிபாஸ்கர்..

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

காமமும் காதலில் ஒன்றே அதை சிலாகிப்பதில் ஆண் பெண் பேதமென்ன


படைப்பு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆண் காமத்தை பற்றி எழுதும் போது கொண்டாடும் ஆண்கள் அதையே பெண்  எழுதினால் ரசிங்க தயவு செய்து கொச்சை படுத்த வேண்டாம்.... காமமும் காதலில் ஒன்றே அதை சிலாகிப்பதில் ஆண் பெண் பேதமென்ன .... கவிதை ரதி தேவி.

காதலே காதலை காதலி
**************************

காத்திருக்கும் காதலைநான்
கட்டித் தர வாரேன்டா!
கன்னக்குழி ரொம்பும்வரை
கள்ளூத்தித் தரேன்டா!

உன்னோட இதழ்கொண்டு
ஊர்வலமாப் போயேன்டா!
உடம்பெல்லாம் உன்தெருதான்
உற்சவத்தை நடத்தேன்டா!

உச்சிதொட்டு பாதம்வரை
உன்நெனப்பு  நோகுதட!
ஊத காத்தும் பட்டுப்புட்டா
ஆசையெல்லாம் சாகுதடா!

காதோரம்  மூச்சுக்காத்தை
கசியவிட வாவேண்டா!
கிறங்கி போகும் காதலுக்கு
சொர்க்கத்தை காட்டேன்டா!

வானவில்லா வளைஞ்சுதரேன்
வாலிபத்தை வாழ்த்தேன்டா!
இச்சையெனும் பாடலுக்கு
இசையமைக்க வாயேன் டா

உள்ளிருக்கும் உஷ்ணத்தை
உள்ளன்பால் தணியேன்டா !
உணர்ச்சி தாகம் தணியட்டுமே
உருகி நீயும் உருகேன்டா !