எதிர்பார்ப்புகள்
ஏமாற்றமாகும் போது
கண்களில்
கண்ணீர் துளிகளே
மொழியாகின்றது ...
இறவாத
வரம் ஒன்று
கேட்பேன்
என்னவனே
எனக்காக
இல்லை
உனக்காக...
நொடியில்
இறந்து விடும்
வரம் ஒன்று கேட்டேன்
உன்
மடியில்
நான் இருக்கும்
ஒவ்வொரு
நொடியின் போதும்...
நீ
என்னை விட்டு
வெகுதூரம்
சென்றாலும்
என் உயிர்
உன்னிடமே
சரணடைகிறது ...
மழையில்
அழுகின்ற
ஊமையாய்
என் காதல் ...
உருவமற்ற
காற்றாய்
என் காதல் ...
என் காதலை
உன் காதில்
சொல்ல வேண்டும் ...
நீ
வேண்டுமென்றால்
என் உயிர்
உன்னை சேரும்
நீ
வேண்டா மென்றால்
என் உயிர்
விண்ணைச் சேரும்...